Saturday, May 31, 2014

மெய்ஞானம் என்றால் என்ன?

.
ஆதியே துணை

மெய்ஞானம் என்றால் என்ன?



1. மெய்ஞானிகள் மனிதன் செத்தபின் உள்ள வாழ்வைப்பற்றி பேசுவார்கள்,
சிலர் இப்படி நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையான மெய்ஞானம் என்பது
செத்தபின் உள்ள வாழ்வைப்பற்றி பேசுவது அல்ல‌. அதைப் பேசுவது மதங்கள்.

மெய்ஞானம் என்பது மனிதாபிமான அடிப்படையில் உயர்வான வாழ்வுமுறையை இந்த மண்ணில் உருவாக்குவதற்கும் வாழ்வதற்குமான‌ தேடல்

2. இந்த உலக வாழ்வை அடியோடு வெறுப்பவர்கள் கருத்து ஒன்றுக்குச் சொல்லப்பட்டதே இதற்கும்

3. மனிதவாழ்வில் விதியை ஆதரித்து உபதேசங்கள் தருவார்கள் கருத்து ஒன்றுக்குச் சொல்லப்பட்டதே இதற்கும்

4. விஞ்ஞானம் சொல்வதை ஏற்காமல் ஆதாம் ஏவாள் போன்ற கருத்துக்களை
ஆதரித்துப் பேசுவார்கள்

5. மனிதனுக்கு மறுபிறப்பு இருக்கிறது என்று சொல்வார்கள்.

இவை மதங்களின் போக்கு, மெய்ஞானம் இல்லை.
.
மெய்ஞானம் என்பது ஜாதி, மதம், இனம், நாடு, கடவுள் என்ற எதற்கும் கட்டுப்படாமல் எதனுள்ளும் அடங்கிவிடாமல் மனித நேயம் காணும் தேடல்



6. அதீத காமத்தால் கடவுளைக் காணலாம் என்று வலியுறுத்துவார்கள்.

இதுவும் தவறான கருத்து. இது ஒருவகை தியானநிலை ஆகலாம். அல்லது தன்னைக் கரைத்த இழந்த அமைதி நிலையெனலாம். ஆகவே இது மெய்ஞானமில்லை.

7. மெய்ஞானம் எதுவும் நிரூப்பிக்கப்படமாட்டாது. மெய்ஞானம் நிரூபிக்கப்படக்கூடியது

8. மனிதனின் பயத்தையும் அச்சத்தையும் கொண்டு வளர்வதே மெய்ஞானம்

மனிதாபிமானமற்ற நிலை தொடர்ந்தால் மனிதன் அஞ்சத்தான் வேண்டும். அந்த அச்சம்
மனிதாபிமானத்தை மனிதனுக்குத் தரக்கூடும் ஆகவே இதை ஓரளவு ஏற்கலாம். என்றாலும் இது முக்கியமானதல்ல‌.

9. மெய்ஞானிகள் புதியமதம், புதிய வாழ்வுமுறை உருவாக்குபவர்கள்
புதிய மதம் உருவாக்குபவர்கள் அல்ல. புதிய வாழ்வுமுறையை நிச்சயம் உருவாக்குபவர்களே

10. நம் நாட்டின் மெய்ஞானிகள் அனைவரும் மதத்திலிருந்து தோன்றியவர்கள்
அவர்களெல்லாம் மெய்ஞானிகள் அல்ல. மதத்திற்கு தாங்கள் உணர்ந்த விளக்கம் சொல்பவர்கள்.

11. மெய்ஞானத்தில் முதல்படி தொடுவதே இயலாத காரியம், இதில் கடைசி படி தொடுதல் என்பதைப்பற்றி கற்பனைகூட செய்யவேண்டாம். ஆகவே எதையும்
முழுமையாய் அறியாமல் சொல்வதே மெய்ஞானம்

மனிதநேயம் நினைத்தமாத்திரம் எவருக்கும் கைகூடும். அதற்கு மனதுதான் வேண்டும். அதற்குச் செம்மைப்படுத்தி அழைத்துச் செல்ல எத்தனையோ மெய்ஞானிகள் இதுவரை
தோன்றி இருக்கிறார்கள். இனியும் தோன்றுவார்கள்.

12. மெய்ஞானிகள் தங்களின் சொந்த கண்ணோட்டத்தைப் பொதுக்கண்ணோட்டமாக ஆக்க முயல்பவர்கள்

சீர்திருத்தம், மனிதநேயம், மனிதவாழ்வு என்பதெல்லாம் பொதுவானவை

13. உண்மை என்று எதுவுமில்லை. மனிதன் பொய். மதம் பொய்.
மனித வாழ்வு பொய். உலகம் பொய் என்று எல்லாமே
பொய் என்பவர்கள்.

மனிதர்களை உண்மையை நோக்கி அழைத்துச் செல்வதே
உண்மையான மெய்ஞானம்

14. பிற மதக் கொள்கைகளை விலக்கிவிட்டுத் தான் பிறந்த மதம் சார்ந்தவற்றை மேலுயர்த்தி புதுவிளக்கங்கள் தருபவர்கள்

இது மதம் சார்ந்தவர்களின் நிலைப்பாடு. உண்மையான மெய்ஞானி மதம் சார்ந்தவனல்ல.

15. சொல்லிச் சென்ற பழைய கருத்துக்களைப் பிழை என்று கண்டு தெளியாதவர்கள்

தவறுகளை அறிந்த மாத்திரம் தங்களைத் திருத்திக்கொள்பவர்களே
மெய்ஞானிகள் ஏனையோர் பொய்ஞானிகள்

16. தான் அடைந்த தோல்விகளால் வாழும் வாழ்வை முழுவதும் வெறுத்து அதனால், உலகின் எல்லாவற்றையுமே பொய் பொய் என்று குற்றம்சாட்டி உலக வாழ்விலிருந்து
தன் விருப்பத்திற்கு எதிராக அதைத் துறந்து சிக்கித் தவிப்பவர்கள்.

அப்படி விலகிச் செல்பவர்களுக்கும் வாழ்வை ஊட்டி
வாழும் வழி சொல்லி அரவணைத்து மனிதநேயம் பாராட்டி
வாழவைப்பவர்களே உண்மையான‌ மெய்ஞானிகள்

17. வாழ்வைத் துறந்து சன்னியாசம் போகச் சொல்வோர்

மனிதநேயம் சன்னியாசம் போற்றாது
வாழவே அழைக்கும்

18. அந்த மதம் சார்ந்த மெய்ஞானிகளை அந்த மதம் சார்ந்த மக்களே போற்றி வணங்குகிறார்கள்

இதெல்லாம் மதம் சார்ந்தவர்களின் போக்கு. அவர்கள் யாரும் மெய்ஞானிகள் அல்ல‌

19. கடவுள் மறுப்புச் சொன்ன மெய்ஞானி என்று ஒருவரும் நம் நாட்டில் கிடையாது. மெய்ஞானிகளில் நாத்திகர்கள் உண்டு என்று சொல்லப்பட்டது. ஆனால் நம் நாட்டில் அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை

கடவுள் நம்பிக்கைக்கும் மெய்ஞானத்திற்கும் சம்பந்தமே இல்லை.

கடவுள் நம்பிக்கை ஒருவருக்கு இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் ஆனால் அவர் மனிதநேய‌ வழியில் சென்றால் அதுவே மெய்ஞானம்

20. திருவள்ளுவர் மெய்ஞானி என்று கூறப்பட்டது. திருக்குறளில் சொல்லப்பட்டவைதான் மெய்ஞானமா என்ற கேள்வி பதிலின்றி போய்விட்டது.



திருவள்ளுவர் மெய்ஞானியேதான். ஒரு மெய்ஞானி சொல்வது அத்தனையும் மெய்ஞானமாய் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். சிலர் 90 சதம் மெய்ஞான‌ வழி செல்வர் சிலர் 10 சதம் செல்லக்கூடும்.

21. மெய்ஞானிகள் மதவாதிகளுக்கும் விஞ்ஞானிகளுக்கும் இடைப்பட்டவர்கள். அதாவது மதம் சார்ந்தவர்கள். விஞ்ஞானம் நோக்கிச் செல்பவர்கள்.

கல்கி அவதாரம்


.
ஆதியே துணை


கல்கி அவதாரம்

கல்கி அவதாரம் என்றாலே நமக்கு தெரிந்தது எல்லாம் ஒரு குதிரையில் வருவார்கள் என்று ஒரு படமோ அல்லது சிலையோ குறிக்கின்றதுதான்.

குதிரையை அதிகம் வளர்த்து அதனை மேய்த்து வந்த சாதிக்கு ராவுத்தன் என்று தமிழில் வழங்கப்பட்டு வந்தது.யானையை மேய்ப்பவனுக்கு யானைப் பாகன் போல.அப்போ குதிரையை காண்பித்தது அவர்களுடைய பிறக்கும் குலத்தினை குறிக்கும் தீர்க்க தரிசனம் ஆகும்.இறுதி தீர்ப்பர் இராவுத்தர்(இஸ்லாம்) குலத்திலேதான் பிறப்பார் என்பதனை சொல்லவே அப்படி வந்தது.

சைவ ஆகம இறைப் பாடல்களில் சிவா பெருமானை "அத்தா அத்தா"என்று நிறைய பாரவான்கள் பாடியுள்ளார்கள்.தந்தையை அத்தா என்று எந்த சாதியில் அழைக்கிறார்கள்?தமிழ் பேசும் ராவுத்தர் குலத்தில்தானே.அப்ப எவ்வளவு நுண்ணியமாக காகபுசுண்டர் பிரானும் மற்றும் பல பாரவான்களும் தீர்க்க தரிசனக் கண் கொண்டு இன்ன குலத்தில் இன்ன சாதியில் வருவார்கள் என்று தங்களுடைய பாடல்களில் கூறியுள்ளது கேட்பதற்கு எவ்வளவு ஆச்சர்யமாக இருக்கிறது.


ஸ்ரீ முஷ்ணம் வராஹ மூர்த்தி கோவில் எத்தனை யுகங்கண்ட காலத்திற்கு முன் நிர்மாணிக்கப் பெற்றது.அப்போது இருந்தே துலுக்க நாச்சியார் வீட்டிற்கு மூலவர் போவதாக திருவிழா நடக்கிறதே.அதே போல் மற்ற புராதன வைஷ்ணவ ஆலையங்களான திருப்பதியிலும்,ஸ்ரீ ரங்கத்திலும்,மதுரை அழகர் கோயிலிலும் இன்றும் நடைமுறையில் இருக்கிறதே.அந்தக் காலத்தில் இஸ்லாம் மதம் ஏது?ஆகையால் இது எதைக் குறிக்கிறது?வருங்கால தீர்க்கதரிசனம் அல்லவா!"முரஹாரி கல்கிக்கு சோபனம் சோபனம்"என்று லலிதாம்பாள் சோபனத்தில் பாடி இருப்பதும் யாரைக் குறிக்கிறது?குதிரை ஏறி வருபவர் கல்கி,ராவுத்தனே என்று பாடியிருப்பது யாரை?

இன்று இறுதி தீர்ப்புக்காக எழுந்தருளி இருக்கும் நம் குலத் தெய்வமாகிய இறுதித் தீர்ப்பர் ஆகிய
அய்யா வைகுண்டர் ஆகிய
மெஸ்சியாவாகிய
மகதி அலைகிஸ் சலாம் ஆகிய
கல்கியாகிய
குரு நானக் ஆகிய
மைத்ரேய புத்தர் ஆகிய
அகூர் மஸ்தாவாகிய
பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள்தான்.

உண்மையான மெய்ஞானம் பெற ஒரு அறிய வாய்ப்பு!!

.
ஆதியே துணை

மெய்வழிச்சாலை - உண்மையான மெய்ஞானம் பெற ஒரு அறிய வாய்ப்பு!!

இந்த தகவலில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னித்து அருளுமாறும் எல்லாம் வல்ல என் மெய்யருட் குரு பிரான் பிரம்ம பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்களை பிரார்த்தித்து வேண்டி எழுத முயற்ச்சிக்கிறேன்.

இந்த உலகத்தில் மெய்ஞானம் என்ற பெயரில் ஒரு பெரிய வியாபரமே நடக்கிறது.

யதார்த்தமான நிசமான மெய்ஞானம் கிடைப்பது மிகவும் கடினம். அது இந்த காலத்தில் இது ஏது என்று எதார்த்த நன் மனம் கொண்டவர்கள் நினைக்க தோன்றும்!.

இந்த கலி கால
த்தில் உண்மையான மெய்ஞானி யாறேனும் இருக்கிறார்களா ?. அப்படி இருந்தால் அவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது. நிச மெய்ஞானி இருந்தால் அவர்கள் இந்த உலக செல்வங்களுக்கும் பொருள்களுக்கும் ஆசைப்படாமல் இருப்பார்கள். ஆகவே அவர்கள் மிகவும் எளிய முறையில் எந்த விளம்பரமும் ஆடம்பரமும் இல்லாமல் இருப்பார்கள். அவர்களை எப்படி தேடி கண்டு பிடிப்பது ?.


அப்படி கண்டு பிடித்து அவர்களிடம் என்ன கேட்க வேண்டும் ?. இந்த உலக செல்வமும் மதிப்பும் இன்னும் அதிகம் வேண்டும் என்றால் உண்மையான மெய்ஞானி தேவை இல்லை. கடும் உழைப்பு இருந்தால் போதும்.

ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றாலும் மெய்ஞானி தேவை இல்லை. நல்ல முறையான சாரிட்டி அல்லது உதவி மையங்களை நாமே அமைத்துக்கொள்ளலாம். அரசாங்கம் மற்றும் எவ்வளவோ உதவி நிறுவனங்கள் உள்ளன.

ஒரு மெய்ஞானியை எப்படி அடையாளம் கண்டு கொள்வது ?.
மாயஜாலம் வித்தை கற்றவரா ?. அப்படியானால் ஒரு மேஜிக் (மஜிசியன்) கற்றவருக்கும் மெய்ஞானிக்கும் என்ன வித்தியாசம் ?.

நோய் நொடி அல்லது மன அமைதி பெற்று தருபவரா?. அப்படியானால் டாக்டர் களுக்கும் மனநல வல்லுனர்களுக்கும் என்ன வேலை ?.

மேலே குறிப்பிட்டுள்ள கேள்விகள் அவ்வளவும் மற்றும் எல்லா விதமான எதார்த்த மெய்ஞான கேள்வி களுக்கும் விடை தரக்கூடிய ஒரு அற்புத கனி கொடுக்கும் விருட்சமே மெய்வழி சாலை!.

பிரம்ம பிரகாச மெய்வழிச்சாலை ஆண்டவர்களின் ஒப்பற்ற நான்கு பெரும் மெய்ஞான வேதாந்தங்கள் படிபவர்களின் உள்ளத்தை நெகிழ செய்யும்!. உண்மையான ஞானம் என்றால் என்ன என்பதை உணரச் செய்யும்!

சாதிகளின் அரசர், தேவதேவேசர் பிரம்ம பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்களின் சிறப்பை உணர அவர்கள் இயற்றி அருலியுள்ள மெய்ஞான வேதாந்த நூல்கள் சாட்சி!

பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளி இயற்றியுள்ள மெய்ஞான நூல்கள் மிகவும் அற்புதமான வேதாந்த விளக்கங்கள் பொதிந்தவைகளாக உள்ளன.

அவற்றின் பெருமையை தெரிந்துகொள்ள இதோ சில இந்த இணைய தளத்தில் விவரிக்கப்பட்டு உள்ளன.

எதார்த்த நன்மன மக்கள் மெய்வழிச்சாலைக்கு சென்று மேலும் விபரம் பெருக!

மெய்வழி சாலை விலாசம்:

MEIVAZHI SALAI
PUDUKKOTTAI DISTRICT,
ANNAVASAL VIA
TAMILNADU-622101,
INDIA



இறுதித் தீர்ப்பராக வந்திருப்பவர் யார்?


.

ஆதியே துணை


இன்று இறுதித் தீர்ப்பராக வந்திருப்பவர் யார்?

திராட்சத்தோட்டத்துக்கு எஜமான்(சர்வத்தையும் படைத்த ஆதி பிதாவாகிய நம் குலத் தெய்வம் மெய்வழி சாலை ஆண்டவர்கள்)


1. பின்பு அவர் உவமைகளாய் அவர்களுக்குச் சொல்லத்தொடங்கினதாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, இரசத்தொட்டியை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறத்தேசத்துக்குப் போயிருந்தான்.

And he began to speak unto them by parables. A certain man planted a vineyard, and set an hedge about it, and digged a place for the winefat, and built a tower, and let it out to husbandmen, and went into a far country.

2. தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்துக் கனிகளில் தன் பாகத்தை வாங்கிக்கொண்டு வரும்படி, பருவக்காலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான்.

And at the season he sent to the husbandmen a servant, that he might receive from the husbandmen of the fruit of the vineyard.

3. அவர்கள் அவனைப்பிடித்து, அடித்து, வெறுமையாய் அனுப்பிவிட்டார்கள்.

And they caught him, and beat him, and sent him away empty.

4. பின்பு வேறொரு ஊழியக்காரனை அவர்களிடத்தில் அனுப்பினான்; அவர்கள் அவன்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள்.

And again he sent unto them another servant; and at him they cast stones, and wounded him in the head, and sent him away shamefully handled.

5. மறுபடியும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்றுபோட்டார்கள்.
And again he sent another; and him they killed, and many others; beating some, and killing some.

6. அவனுக்குப்பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனுக்கு அஞ்சுவார்களென்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடத்தில் அனுப்பினான்.

Having yet therefore one son, his wellbeloved, he sent him also last unto them, saying, They will reverence my son.

7. தோட்டக்காரரோ: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சுதந்தரம் நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;

But those husbandmen said among themselves, This is the heir; come, let us kill him, and the inheritance shall be ours.

8. அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள்.

And they took him, and killed him, and cast him out of the vineyard.

9. அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா?

What shall therefore the lord of the vineyard do? he will come and destroy the husbandmen, and will give the vineyard unto others.

குறிப்பு:

எஜமான் = ஆதிப் பிதா

தோட்டம் = உலகம்

தோட்டக்காரன் = மெய் தேட்டம்(இறைவனிடம் விசுவாசம் இல்லாத) இல்லாத உலக மக்கள்(கலி நீசர்கள்)

ஊழியக்காரன் = தீர்க்கதரிசிமார்கள்

குமாரன் = இயேசு பிரான்

திராட்சத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான்
அந்த மற்றவர்கள் = மெய் தேட்டம் உள்ள தேவனுக்கு உரிய பிள்ளைகள்(மனு ஈசர்கள்)

சாலைத்தமிழ் (தெய்வத்தமிழ்)


.

ஆதியே துணை

"சாலைத் தமிழ்"

தெய்வத்தமிழ், செந்தமிழ், அமுதத்தமிழ் என்றெல்லாம் போற்றப்படும் உயர்தனிச் செம்மொழியாகிய நமது தமிழ் மொழியில் இருநூற்று நாற்பத்தேழு (247) எழுத்துக்கள் உள்ளன. அவற்றுள் 'ஙகர', 'ஞகர', 'நகர' என்னும் மூன்று வரிசைகளுள் 33 எழுத்துக்கள் பயன்படுத்தப்படாமல் விடுபட்டுப்போயுள்ளளன. அவற்றைப் பயன்படுத்தாமலே வழங்கி வருகின்றனர்.

கரைகாண அறிவுக் கடலினுடைய முகடேறி முழுப்பேற்றுக் குன்றேறி னிற்கும் பிரம்ம பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்கள் அனைத்து எழுத்துகளையும் "ஒலியிலக்கண மரபு" குன்றாமல் காரண காரியத் தெளிவுகள் கூறிப் பயன்படுத்தித் தங்களின் அற்புத ஞான நூல்களை இயற்றியுள்ளர்கள்.



இதன் விபரம் வருமாறு:

'ங்' - என்பது ஒரு சிறப்பெழுத்து, தங்கம் என்பதனை 'ங்' (ING ) என்பதன் இனவெழுத்தான 'ங' (Inga ) வைச் சேர்த்து, 'தங்ஙம்' (Thangam ) என்றே எழுதுவது சரி. 'தங்கம்' (Thankam) என்பது முறையற்றது. இங்ஙனம் அங்ஙனம் என்பது வழக்கிலுள்ளன.

'ஞ்' என்பது மற்றொரு அற்புதச் சிறப்பெழுத்து. 'மஞ்சம்' (MANCHAM) என்பதற்குப் பதிலாக 'மஞ்ஞம்' (MANJAM) என்று எழுதுவது சரி. மலையாள மொழியில் 'குஞ்சிக் கண்ணு' என்பதற்கு 'குஞ்ஞக்கண்ணு' என்று பெயர் வழங்கி வருவது ஒலியிலக்கண மரபு குன்றாத நிலை.

'ந்' (INDH) - என்பது ஒரு சிறப்பான எழுத்து. 'அந்த' (ANTHA ) என்பதற்குப் பதிலாக அந்ந (ANDHA ) என்று எழுதுவதே முறையாகும்.

'ன்' + 'அ' (IN + A = NA ) ந் + அ (IND + A) = ந (INDHA) என்றுதானே ஒலியிலக்கணம் வழுவாமல் உச்சரிக்கப்பட வேண்டும்!
'வந்து போனான்' என்பதை மலையாளச் சொற்களில் 'வந்நு போனான்' என்று குறிப்பிடுவது சிந்திக்கப்பட வேண்டியதொன்று.

இந்த மென்மையான மூன்றெழுத்துக்களின் உயிர் மெய்யெழுத்துக்கள் அனைத்தையும் எங்கள் பெருமான் பயன்படுத்திப் பழைய, சீரிய, ஞானச் செழுந்தமிழை உயிர்ப்பித்து அதற்க்குச் 'சாலைத்தமிழ்' என்று பெயர் வழங்கியருளியுள்ளார்கள்.

அங்கம் (ANKAM) - அங்கி (ANKI) - அங்கு (ANKU) - அங்கே (ANKE)
அங்ஙம் (ANGAM) - அங்ஙி (ANGI) - அங்ஙு (ANGU) - அங்ஙே (ANGE)

அந்த (ANTHA) - அந்தி (ANTHI) - அந்தோ (ANTHO) - சந்தை (SANTHAI)
அந்ந (ANDHA) - அந்நி (ANDHI) - அந்நோ (ANDHO)- சந்நை (SANDHAI)

அஞ்ச(ANCHA) - அஞ்சா(ANCHA) - அஞ்சி(ANCHI) - அஞ்சு(ANCHU) - அஞ்சே(ANCHE)
அஞ்ஞ(ANJA) - அஞ்ஞா(ANJA) - அஞ்ஞி(ANJI) - அஞ்ஞு(ANJU) - அஞ்ஞே(ANJE)

என்று ஒலியிலக்கண மரபு குன்றாமல் எழுதியருளியுள்ளார்கள்.




மொழிக்கு முதலில் இருசுழி னகரத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
இருநூற்று நாற்பத்தேழு அழகிய சிலைகள் கொண்ட அற்புதமான கோபுரத்தில்
முப்பத்து மூன்று சிலைகளை எடுத்தெறிந்து விட்டால் அது முழு அழகுடயதாகுமா ?
அந்த முப்பத்து மூன்று சிலைகளையும் மீண்டும் அவையவை இருந்த இடத்தில் அழகுற வைத்து பார்த்து அதன் சீரிளமைத் திறன் வியந்த செம்மல் எங்கள் குரு கொண்டல்.

எனவே எம்பெருமான் தாங்கள் இயற்றியருளிய நூலில்:

"அச்சர மமைத்தோன் அறுந்நுபோ னதுகண்
டமைந்நதை யமைத்து அறைந்நதிக் கிரந்நம்
அறிவினை யறிந்நோர் அறிவரிவ் வாய்மை
பாமரர் அறியார் பண்டிதர் அறிவர்
இதனை உணர்ந்நபின் எடுத்தோதிக் கிரந்நம்."

என முன்னறிவிப்புக் கூறி, தாங்கள் நூல்களை இயற்றியருளியுள்ளார்கள்.
மேலும் அதற்காகப் புதியதொரு அதியற்புதமான லிபியையும் உருவாக்கி வைத்துச் சென்றுள்ளர்கள்.

அடக்கம் - சாகாக்கலை – மரணமிலாப் பெரு வாழ்வு


.

ஆதியே துணை

http://www.youtube.com/watch?v=84L4vh03u7k

இங்கு காண்பிக்கப்படும் படம் ஒரு பெண் கிருத்துவ துறவியின் அடக்கமான உடல் பிரான்ஸ் நாட்டில் இன்னும் ஒரு தேவ ஆலயத்தில் எந்த வித செயற்கை ரசயானமோ முறையோ சேர்க்காமல் இயற்கையாக இறைவனால் அழியாமல் காக்கபடுகின்றது.இது போன்று அடக்கமாகிய எந்த உடலும் அழிவதில்லை.இந்த நிலையை அடைவதே நாம் மானிட பிறப்பு எடுத்ததின் பயன்.



நாம் ஆன்மீக பாதையில் வெற்றி அடைந்தோமா இல்லையா என்பதனை சோதனை செய்ய வழி இருக்கா? உண்டு பொதுவாக நாம் நினைப்பது உலகில் எல்லோரும் ஒரே மாதிரிதான் இறக்கின்றோம் என்று.ஆனால் இறப்பு இரண்டு வகைப்படும்.

1.உலகில் பொதுவாக எல்லோரும் இறக்கும் பொழுது முழுக்கு வெளியாகிவிடும்,அதாவது மலமும் ஜலமும் வெளியே வந்துவிடும்.இப்படி வெளியாவதே தீட்டு என்று கூறுவதுண்டு.இந்த தீட்டின் காரணமாகத்தான் அந்த உடல் ஞாற்றம் வீசுகிறது(பிண வாடை).





இப்படி இறப்பதை வள்ளுவர் பெருமான் கூறும் பொழுது "அடங்காமை" என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்.




இப்படி இறந்தால் அவர்கள் அடையும் இடமோ "நரகம்" என்பது வேத சட்டம்.



YAMA PHOTO (TIBET)

சித்தர்கள்,முத்தர்கள்,ரிஷிமார்கள்,சிவனடியார்கள்,இறை பக்தி மார்க்கத்தில் சிறந்தவர்கள் போன்றோர் இறப்பது கிடையாது.  
அவர்களுடைய உயிர் அவர்களின் தலையில் சென்று அடங்கி விடும். இதனை வள்ளுவர் பெருமான் "அடக்கம்" என்று குறிப்பிடுகிறார்.

திருக்குறள்:
"அடக்கம் ஆமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்"




அமரர் என்பது தேவர்களை குறிக்கும்.தேவர்களுக்கோ அழிவென்பது கிடையாது.எக்கோடி காலமும் வாழ்பவர்கள்.அழியாத்தன்மையை எய்த "அடக்கம்" ஆக வேண்டும்.  அப்படி ஆகாவிட்டால் "அடங்காமை"(இறப்பு)(மரணம்=மாரணம்=மா+ரணம் = பெரிய வேதனை) என்பது ஆரிருள்(நரகம்) கொண்டு சேர்த்து விடும் என்று அந்த குறள் கூறுகிறது.

இப்படி அடக்கம் ஆகும் உடலுக்கு 10 அடையாளங்கள் இருக்கின்றன:

1.அந்த உடல் கெட்ட ஞாற்றம் வீசாது.தேவ மணம் வீசும்.அந்த உடலில் முழுக்கு(தீட்டாகிய மலமும் ஜலமும்) வெளியாகாது.

2.அந்த உடல் விரைப்பாகாது.எவ்வளவு நேரம் ஆனாலும் வளைந்து கொடுக்கும்.அதற்க்கு நாடி கட்டு கால் கட்டு இட தேவையில்லை.

3.அந்த உடல் கணக்காது,ஒரு பூ கூடையை தூக்கினார் போல லேசாக இருக்கும்.

4.இந்த உடல் நேரம் ஆக ஆக வியர்வை கொட்டும்.

5.உடல் குளுந்து போகாமல் எப்பொழுதும் வெது வெதுவென்று அதன் சூடு மாறாமல் இருக்கும்.




6.பொதுவாக பிணத்தின் தொண்டை அடைபட்டுவிடும் ஆனால் அடக்கமான உடலின் தொண்டையோ எவ்வளவு தீர்த்தம் கொடுத்தாலும் அது தொண்டையின் வழியாக இறங்கும்.

7.உயிர் உள்ள பொழுது எப்படி ஒரு உடலுக்கு சொடுக்கு எடுக்க முடியுமோ அது போல இந்த அடக்கமான உடலிலும் எடுக்கலாம்.

8.உயிர் உள்ள பொழுது இந்த உடலில் இருந்த கூன் மேலும் பல கோளாறுகள் எல்லாம் அடக்கமானவுடன் அது நேராகிவிடும்.பார்ப்பதற்கு இளமை தோற்றம் திரும்பிவிடும்.80 வயதில் அடக்கம் ஆகும் ஒரு உடல் அடக்கமானவுடன் அதன் தோற்றம் 40 வயது உடலை போல் ஆகிவிடும்.

9.இறந்தவர்களின் உடலின் முகம் அரண்டு காணப்படும்.அடக்கமனவர்களின் முகம் இள சிரிப்புடன் காணப்படும்.
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பார்கள்.
நாம் தூங்கி கனவில் ஒரு கெட்ட கனவு கண்டு விழிக்கும் பொழுது நமது முகம் அரண்டு காணப்படும்,இதே ஒரு நல்ல கனவு கண்டு விழித்தால் சிரிப்புடன் எழுவோம்.
இறந்த ஆன்மா நரகத்தை கண்டு அது அரண்டு விடுகின்றது.
அடக்கமாகும் ஒரு ஆன்மாவோ இறைவனை கண்டு அந்த எக்களிப்பில் சிரிக்கின்றது.

10.அடக்கமாகும் உடல் எக்கோடி காலமானாலும் மண்ணில் மக்காது.இறந்தோ உடலோ 6 மாதத்திற்குள் கிட்ட தட்ட சின்னா பின்னமாகிவிடும்.
பூமியை நாம் தாய் என்று கூறுவோம்.ஒரு தாய் தன் மகனை தின்பதாக இருந்தால் இவன் எக்கேடு கெட்ட நிலைக்கு தள்ளபட்டால் இது நடக்கும்?
அடக்கமான சடலத்திற்கோ அந்த பூமி அது மக்காமல் பாதுகாக்கின்றது.ஏனெனில் இவர்களோ வந்த கடமையை சரி வர செய்ததால் இந்த நிலை.






சித்தர்களின் சாகாக்கலை – மரணமிலாப் பெரு வாழ்வு

ஒரு கடினமான காரியம் இல்லை. சித்தர்கள் எல்லா (4448 வகையென வகுத்திருக்கிறார்கள்) நோய்களுக்கும் மருந்திருப்பது போல் இறப்பும் ஒரு வியாதியென்றும்.சாவு என்பதை மீறியவர்கள் சித்தர்கள்.எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் சாமீ(சாவை மீறியவர்) என அழைத்துக் கொண்டார்கள்.
ஒரு நிமிடத்துக்கு 15 மூச்சு வீதம்,ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு வீதம் ஒரு நாளுக்கு 21,600 மூச்சுக்கள் ஓடுகின்றன.இப்படி மூச்சு ஒரு கதியில் ஓடி விதியை உருவாக்கி வைத்து இருக்கிறது.ஒரு நாழிகையான 24 நிமிடங்களில்
360 மூச்சுக்கள் ஓடும்,அந்த 360 மூச்சுக்களும் வட்டத்தின் 360 டிகிரிகளையே குறிக்கும்.அதற்குள் நவகிரகங்களின் கதிரியக்கப் பாய்ச்சல் ஒருசுற்று முடிந்துவிடும்.அதனாலேயே ஒரு நாழிகைக்கு 24 நிமிடக்கணக்கு ஏற்படுத்தப்பட்டது.
216 உயிர் மெய்யெழுத்துக்களும் இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கின்றன.12 உயிரெழுத்துக்களும் வலது நாசியில் ஓடும் சூரிய கலை 12 அங்குலம் ஓடுவதைக் குறிக்கும்.ஒரு மாதத்தில் காலையில் 6 மணியிலிருந்து 7 மணிவரை சூரிய கலை 12 நாட்கள் மட்டுமே ஓடும்.அந்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

உயிரெழுத்துக்களில்குறில் எழுத்து ஐந்தும் பஞ்ச பூதங்கள் ஐந்தை குறிக்கும்.நெடில் ஏழும் நமது உடலில் உள்ள சக்கரங்கள் ஏழைக்குறிக்கும்.வள்ளுவர் தமது குறட்பாக்களில் முதலடியில் 4 சீர்களையும் இரண்டாவது அடியில் மூன்று சீர்களையும் (3+4=7)ஏழும் ,அதிகாரங்கள் 133(1+3+3=7) ஏழும் நமது உடலில் உள்ள சக்கரங்கள் ஏழைக்குறிக்கும்.


18 மெய்யெழுத்துக்களும் இடது நாசியில் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திர கலையையும்,மனம்,உயிரையும் சேர்த்து 18 ஐக் குறிக்கும்.இந்த பதினெட்டையே,பதிணென் சித்தர்கள் என்றும் ,(பதி எண்ணும் சித்தர்கள் என்றும் குறிப்பிடுவர்),பதினெட்டுப் புராணங்கள் என்றும், யோக சாதன முறைகளி ஏற்படும் தடைகள்(நிலைகளும்) பதினெட்டு,அய்யப்பன் கோவில் படிகள் பதினெட்டு,பகவத் கீதையில் பதினெட்டுஅதிகாரங்களைக் குறிக்கும்,  தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த யுத்தம் பதினெட்டு வருடங்கள்,ராம ராவண யுத்தம் பதினெட்டு மாதங்கள்,மஹா பாரத யுத்தம் பதினெட்டு நாள்,சேரன் செங்குட்டுவன் இமவானுடன் யுத்தம் புரிந்தது பதினெட்டு நாழிகை, பதினெட்டாம் படிக்கருப்பசாமி என்றழைப்பதும் இதனால்தான், ஏன் பைபிளில் ஆகமங்கள் பதினெட்டு,அதே போல இடது நாசியில் மூச்சு காலையில் 6 மணியிலிருந்து 7 மணிவரை ஓடும் நாட்களும் ஒரு மாதத்திற்கு பதினெட்டு நாட்கள்.

மதிப்பிலடங்கா மாணிக்கபரிசு

Friday, May 30, 2014

மெய்வழி பற்றிய குறிப்பு


.

ஆதியே துணை


மெய்வழி பற்றிய குறிப்பு


1. நிறுவனர்: வித்துநாயகம் மெய்வழிச்சாலை ஆண்டவர்கள்

2. மதம் : மறலிகை தீண்டா சாலை ஆண்டவர்கள் மெய்மதம்

3. குலம்: சத்திய தேவ பிரம்மகுலம் (வான்குலம்)

4. கோத்திரம்: ஆங்கிரச கோத்திரம்

5. சாதி : தன்னை அறிந்து சாதித்தவர்

6. சபை : எமனணுகா பரிசுத்தவான்களின் சபை

7. கல்வி : மெய்ப்பாலறியும் மெய்க்கல்வி

8. கலாசாலை : சதுர் யுகங்களுங்கண்ட மெய்மை

9. க்ஷேத்திரம் : மெய்குண்டம் என்னும் குரு க்ஷேத்திரம்

10. ஊர் : உயிர்ப்பயிரேற்றும் நித்திய சுமங்கல ஊர்

11. பலன் : சாவாவரம், நாறிச்சாகும் நரர்களைத் தேவராக்குதல்

12. வழி : சர்வ புவனாதியங்கட்கும் உய்வழி கூட்டும் மெய்வழி

13. கொடி : வெண்துகிலில் கிள்நாமம். கூர் இல்லாபிறை வடிவம்

14. திருவிழாக்கொடி : பூராங்கொடி

15. அடையாளம்: செந்நிற காஷாய தலைப்பாகையில் கிள்நாமம்

16. திருமணம் : நீதித் திருமணம்

17. மங்கள தாரகை (மாங்கல்யம்) : புள்ளியை மையமாக்கொண்ட ஆறு இதழ்கள்

18. வேதம் :                                                                                                                                          
1. ஆதிமெய் உதய பூரண வேதாந்தம் 
2. ஆண்டவர்கள் மான்மியம் 
3. எம படரடி படு கோடாயிதக்கூர் 
4. திருமெய்ஞ்ஞானக் கொரல் பதி மறைவிற்குப் பின்னர் தொகுத்தவை 
5. வான்மதிக் கொரல் 
6. விஸ்வனாத திரு ஒலி வசனம் 
7. திருமெய்ஞ்ஞான அருளமுதம் 
8. திருமெய்ஞ்ஞான தேவாமிர்தம் 
9. திருமெய்ஞ்ஞான தில்லையமுதம் 
10. மெய்வழி தெய்வத்தின் திருவரலாற்று தடம் சுவடுகள்

19. சமரசம் : தொழிலதிபர்கள், உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள், பட்டம் பெற்றோர்கள் ஆகியோர் தங்கள் வசதிகளைத் துறந்து எளிமையாக கூரைக்குடிசையில் ஏழைகளோடு எளிமையாக வாழ்கிறார்கள்.

20. நீதம் : வெவ்வேறு மதத்தின் 69 ஜாதிகளைச் சேர்ந்த பல ஆயிரமக்கள் ஆன்ம நேய ஒருமைப்பாட்டால் ஒன்றாகி வாழ்கிறார்கள்.

21. நெறி : கொலை, களவு, போதை, விபசாரம், பொய், புகை (சிகரட்), சினிமா பார்த்தல் ஆகிய ஏழு குற்றங்களும் விலக்கி பரிசுத்தமாக வாழ்தல்

 

22. மூலமந்திரம் : 

மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் 
கோடிகால மக்களிடத்திலுமுள்ள சர்வமூலமந்திர 
நிரூபிக மகான்மியராகிய யுகவான் 
சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு

23. மகா சங்கல்ப மந்திரம்: (காலை 7 மணிக்கு)

மறலி என்கிற எமனுடைய அவமான அவஸ்தை வந்து தீண்டும் அடையாளம், கசப்பு தீட்டு பிணநாற்ற ஜலம் வெளியாகி யுகங்கோடிகால நரக வேதனைக்குப் போகாமல் அதை மாற்றி, பரமபத நித்திய மகிழ்ச்சி வாழ்வு வரத்தில் ஏற்றவே சதுர் யுகத்திலும் உண்டான எல்லா ஜாதி, மத, வேதங்களும் வந்திருக்க, அந்த அகமிய மகா அதிவல்லப தெய்விக பிரம்மவித்தைச் செயலானது, மாநெடுங்காலங்களாக மக்கள் புழக்கத்தில் இல்லாது உலகத்தை விட்டு மறந்து மறைந்தே போய்விட்ட இறுதிக்காலமாகிய இது நேரம், எமபயத்தைக் கடத்தி அதே பிரம்ம வித்தையாகிய சுவர்க்க பதி பரமபத முத்திச் செயலினில் ஏற்றிவைக்கும் கல்கி மகதியென்னும் மூக்குக்கு வெளியே மூச்சு ஓடாத தவமுடைய ஊண் உறக்கமற்ற எங்கள் குலதெய்வம், மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் மெய்மதத்தில் நாங்கள் சேர்ந்து ஆகியிருக்கின்றோம். எதார்த்த நன்மனத்தினர் யாராக இருந்தாலும் சேர்ந்து தேவப்பிறப்பிலே பிறந்து ஆகிக்கொள்வதற்கு ஆண்டவர்களுடைய ஆசீர்பாதம்

24. பாவ மன்னிப்பு மந்திரம் (சுருக்கம்)

எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த, எங்கும் நிறைந்த ஆண்டவர்களே! எம்மை இரட்சித்து ஆளும் இராஜாவே! யான் அறிந்து செய்த பாவங்களைத் தொட்டும், அறியாமற் செய்த பாவங்களைத் தொட்டும், அடக்கமாய் செய்த பாவங்களைத் தொட்டும், வெளிச்சமாய் செய்த பாவங்களைத் தொட்டும், எல்லாப் பெரும்பாவங்களையும் எல்லாச் சிறுபாவங்களையும் உணர்ந்து நினைந்து உருகி வணங்கி, மன்னிக்கும்படி உங்களை மன்றாடி வேண்டுகிறோம் ஆண்டவர்களே! எந்தச் சிறு அளவிலும் இன்னல் என்னும் நரகம் எங்களைத் தீண்டாது காத்தருளும்படி நும் பாதத்தில் வீழ்ந்து அழுது வேண்டுகிறோம் ஆண்டவர்களே

மெய்வழி சாலை திருவிழாக்கள்


.

ஆதியே துணை


மெய்வழி சாலையம்பதியில் எடுத்து வைக்கப்பெற்றுள்ள திருவிழாக்கள் மெய்வழி பொன்னரங்க தேவாலயத்தில் நிகழ்ந்து வருகின்றன.

திருவிழா தேவ நிகழ்வுகள்

1.   தை முதல் நாள் மக்களுடைய நவக்கிரக கோள்களை அகற்றி அனுக்கிரகம் செய்வதற்கு முக்கூர் கத்தி கொண்டுபானைப்பலி ஏற்கும் பொங்கல் திருவிழா நிகழ்கிறது. மறுநாள் செல்வப் பொங்கல் நிகழ்கிறது.

2.   பங்குனி பௌர்ணமி முன்தினம் பாட்டையர் தனிகைமணி வள்ளல் அவர்களிடம் ஆண்டவர்கள் ஞானோபதேசம் பெற்று ஆட்கொள்ளப் பெற்ற நாளான பிறவானாள் பிறப்புத் திருவிழா நிகழ்கிறது.

3.   வைகாசிப் பூரணை நாளில் உலகம் முழுவதினுக்கும் தெய்வீக திருவருளை அருள, ஆடுமேய்ப்பு திருக்கோலம் ஏற்ற காட்சியும் தேவத்திருமுடி சூடப்பெற்ற கங்கண திருக்காப்பு காட்சியும், பாசுபத தவக்கோல காட்சியும் நிகழ்கிறது. மறுநாள் தேவரத கருமான குடிக்காட்சியும், புத்தாடை புனைச்சீர் அணியும் நிகழ்ச்சியும் நிகழ்கிறது. நன்னம்பிக்கை வைப்பு என்னும் பாபவிமோசன திருமந்திரமும் ஓதப்பெறுகிறது

www.youtube.com/watch?v=tQ5BMhR4A-0

.http://www.youtube.com/watch?v=qwBFJ_OFciQ

4.   புரட்டாசி பௌர்ணமி நன்னாளில் மெய்வழி குல மக்களின் தூலப்பிணி நீக்கி அருள்வரம் தரும் அம்மையப்பராக எழுந்தருளும் பிச்சை ஆண்டவர் திருக்கோல திருவிழா நிகழ்கிறது.

5.   கார்த்திகை திங்களில் யுகத் தவ காட்டில் கார்க்கும் தீ கைக்கொண்ட கார்த்திகையர் தீப திருக்காட்சி திருவிழா நிகழ்கிறது.

6. மார்கழி கடைசி நன்னாள் அன்று சாகாவரத்தைச் சலிக்காமல் வழங்கி புதுயுக வித்துக்களைத் தேர்ந்தெடுக்க வந்த ஆண்டவர்களின் திரு அவதாரத் திருநாள் கொண்டாடப் பெறுகிறது.

பொன்னரங்க தேவாலய ஆடலங்கள் மெய்வழி பொன்னரங்க தேவலாயத்தின் திருசன்னிதானத்தில், நாள் தோறும் பாத பூசை பிரார்த்தனைகள் செய்து, ஆலய அலங்காரம் செய்து அமுது படைத்தல், நேர்த்திக்கடன் சமர்ப்பித்தல் போன்றவை நிகழ்ந்து வருகின்றது. அனந்தாதி தேவர்கள் தங்களின் புனல்ஜென்ம வழிபாட்டை அவ்வப் போது நிகழ்த்துகிறார்கள்.


மெய்வழி மக்கள் ஜீவதேக ஜீவமுத்தி பெற்று பரமபத வாழ்வில் குடியேறிய சாவாவர நித்திய ஆண்டு பூர்த்திகள் நிகழ்கின்றன. அடக்கமாகிய 3-ஆம் நாள் ஜீவபந்து உரிமை காட்சி, 40-ஆம் நாள் ஆன்ம சஞ்சார உரிமை காட்சி போன்றவைகளும் நிகழ்கின்றது. குழந்தைகளுக்கு நாமம் சூட்டல், தீர்த்தம் போடுதல், காதுக்குப் பொன் பூட்டல், மற்றும் திருமண வைபவங்கள் போன்ற அனந்தானந்தம் நிகழ்வுகள் நாள் தோறும் நடந்து வருகின்றது.

தெய்வமவர்களின் திருமேனி சயிலத்தில் பூத்து உதித்த தெய்வ திருக்குமாரர் மெய்வழி சாலை வர்க்கவான் அவர்கள் இன்று மெய்வழிச் சாலையின் ஆதினராக இருந்து வருகிறார்கள். ஆண்டவர்கள் எடுத்து வைத்துள்ள கொடி ஏற்றங்கள், மற்றும் திருவிழாக்களை இவர்கள் முன்னின்று நடத்துகிறார்கள். மெய்வழி மக்களின் முதன்மைத் தலைவராகவும் திகழ்கிறார்கள். 

மெய்வழி சாலையம்பதியில் வணக்க முறைகள்


.

ஆதியே துணை


மெய்வழி சாலையம்பதியில் எடுத்து வைக்கப்பெற்றுள்ள வணக்க முறைகள் மெய்வழி பொன்னரங்க தேவாலயத்தில், நாள் முழுவதும் இரவு பகலாக தவ வணக்கங்கள் நிகழ்ந்து வருகின்றன.

  1. இரவு சரியாக 12 மணிக்கு பெரிய வணக்கம் ஆரம்பமாகிறது. மெய்வழி தவவிரதர்கள் இதனை நடத்துகிறார்கள்.

2.   இரவு 1.30 மணிக்கு துந்துமி முழங்கி வணக்கம் செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஒரு குழல் ஊதி வணக்கம் நடைபெறுகிறது.

3.   இரவு 3.00 மணிக்கு ஒரு குழல் வணக்கம் மட்டுமே நிகழ்கிறது. இது நிகழும் போது ஆலயத்தின் உள்ளே யாரும் இருக்கக்கூடாது. அடுத்து உத்தியோவன சித்தி கானகம் என்று சொல்லி திட தீர்க்க தரிசனங்கள் ஆலயத்தை நோக்கி ஜபிக்கப்படுகிறது.

4.   இரவு 4.00 மணிக்கு மெய்வழி மக்களுக்காகவே கூறப்பெற்றுள்ள புத்த பகவான் தீர்க்கதரிசனம் உரைக்கப்படுகிறது.

5.   இரவு 4.30 மணிக்கு வெறும் துந்துமி மட்டும் ஒலித்து வணக்கம் நிகழ்கிறது. அடுத்து ஆண்டவர்களைத் தோத்தரித்து பஞ்சணை எழுச்சி பாடப் பெறுகிறது.



6.   விடியற்காலை 5.30 மணிக்கு ஆண்டவர்கள் திருவரலாற்றைக் கூறும் ஆதிமான்மிய பகுதி ஓதப்பெறுகிறது.

7.   காலை 7.00 மணிக்கு, மகா சங்கல்ப மந்திரம் ஓதப்பெறுகிறது.

8.   மத்திய உச்சி உரும கற்பகத்தவக் காலம் நன் பகல் 12.00 மணிக்கு அறவலம் நிகழ்கிறது. ஆண்டவர்களின் உருமகால கற்பக தவநேரத்தில் யாரும் ஒருவரோடொருவர் பேசக்கூடாது என்று ஆலயமணி அடித்து அறிவிக்கப்படுகிறது. மாலை ஆனவுடன் ஆண்டவர்கள் எடுத்து வைத்துள்ள முறைப் படி வணக்கம் நிகழும்.

9.   இரவு 9.00 மணிக்கும் இதே போன்று வணக்கம் நிகழும். புத்த பகவான் தீர்க்க தரிசனமும் ஓதப்பெறும்.

10. ஆண்டு முழுவதும் நடைபெறும் மெய்வழி கிள்நாமக் கொடியேற்றங்கள் “மெய்ஞ்ஞான கொடி ஏற்றி அனைவரையும் தூரத்தில் உள்ளவர்களையும் பயில்காட்டி அழைப்பார்கள்” என்று ஏசய்யா தீர்க்க தரிசனம் கூறுகின்றார்.
அதன்படியே, உதய நெடும் உயர்ஞானக்கொடி பொன்னரங்க தேவாலயத்திற்கு முன்பு ஏற்றப்பெற்று, இறை திருவடிச்சேர் உலக மக்களை அறைகூவி அழைத்து ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று மெய்வழி கிள்நாம கொடியேற்றமும், வளர் பிறைமூன்றாம் நாள் மெய்வழி மாதாந்திர கிள்நாமக் கொடியேற்றமும் மெய்வழி அனந்தர் பெருமக்களால் தவமுறை பக்தி பரவசத்துடன் ஏற்றப் பெறுகின்றது. 

மெய்குண்டம் என்னும் மெய்வழிச்சாலை

.
ஆதியே துணை

       மெய்குண்டம் என்னும் மெய்வழிச்சாலை மகிமையும் மெய்மதத்தின் பெருமையும் மெய்குண்டம் என்னும் மெய்வழிச்சாலை தரணி எங்கும் காணமுடியாத ஒப்பற்ற ஒரு தவ எல்லை ஆசியா கண்டம், இந்திய தமிழ் தொண்டமான் சீமை, புதுக்கோட்டை மாவட்டத்தில், கீரனூரிலிருந்து அன்னவாசல் போகும் சாலைக்கு அருகில், ஊரல் மலைச்சாரலில், இந்த மெய்வழிச் சாலை என்னும் தேவபூமி உள்ளது.


அருள் அடைபடுத்து மெய்ஞ்ஞான ஜீவ உயிர்ப்பயிரேற்றம் செய்யும் எழிலோங்கும் தவக் கானகம் இது. தமது வாடாத தவவலிமையால் தம்மை வணங்கும் நன்னெறி மக்கள் அனைவரையும் அழியாப் புகழ் உடம்பு தந்து பரமபதம் அடையச் செய்விக்கும் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் காருண்ய தவாதிக்க குருக்ஷேத்திரம் இது. பொன்னரங்க தேவாலயம் : தம்மை வேண்டி நிற்போர் அனைவரையும் அழியாத நெடுங்கால யுகவித்துகளாக ஆக்கும் பிறவா நெறி பிரம்ம வித்தையை அருளும் ஆண்டவர்களின் இந்தத் திருச்சன்னிதானமே மெய்வழி மக்களின் பொன்னரங்க தேவாலயம் ஆகும்.



மக்களுக்கு வரமனைத்தும் தந்தருளும் தேவ ரூபமாக மாறி இங்கு ஏழாம் ஊழிப்பிரளய அமளி மிகுந்த நாளின் இறுதி தீர்ப்பினை நடத்தும் பொருட்டு, வான் கன்னி விராட் தவத்தில் ஏறியுள்ள மெய்வழிச்சாலை ஆண்டவர்களின் வான் செல்வ ஜீவத் திருமேனியின் பரிசுத்த ஆவி சதாவீசி கருணை பாலித்து கொண்டு இருக்கும் புண்ணிய ஸ்தலம் இது அனந்தர் குல சிந்தை மந்திரமான இந்த மெய்வழி தெய்வத்தின் இந்த ஸ்தலம், பொல்லாப்பிணி நீக்கும் பெருந்தவப்பள்ளியாகும்.

மெய்வழிச்சாலை - மெய் நகரம் இந்த சத்திய மெய்வழி திருவருள் நகரத்தில், இந்த ஆதிமூல ஆவியின் மெய்க்கிரண பரிசுத்தாவி சதா நின்று விசிறி வீசி, அனைவருக்கும் கருணை பாலித்து சகல இக பர சௌபாக்கியம் அளித்துக் கொண்டிருக்கிறது. ஜெகம் உய்ய வந்துள்ள ஜீவ வழிப்பாட்டு வசந்த எல்லை இது. ஜீவரட்சிப்பு தந்தருளும் புனித பூமி இது. துன்பம் தரும் நவக்கிரக கோள்களின் பீடிப்பை நீக்கச் செய்யும் தரும பூமி இது! துஷ்ட நிக்கிரக, தேவசிஷ்ட பரிபாலனம் செய்யவே, நீதி நெறி சூடாமணி கோடாயுத தேவ சன்னதங்களைப் பெற்று அமர்ந்திருக்கும் தெய்வத்தின் பதி இது! பாவ சங்கார வரதரின் ஜீவ சஞ்சீவி மாமலையே இந்த மெய்வழிச் சாலை! “இதன் பெயர் மெய்நகரம். இந்த மெய்க்குருபிரானைத் தரிசித்தால் மறுபிறப்பு என்னும் தேவப்பிறப்பில் ஆக்கி உயிர்ப்பித்து எழுப்புவார்கள்” என்று பிரம்ம ஞானோத்தமர் கபீர்தாஸ் அவர்கள் திட தீர்க்க தரிசனம் கூறுகின்றார்.



“இந்த ஸ்தலம் காருண்ய ஸ்தலமாக மாற்றப்பெறபோகிறது என்று - அடிபேரிகை” என்று நித்திய சூரியர் வீரபிரம்மம் அவர்கள் தீர்க்க தரிசனம் முழங்கி வைத்துள்ளார். அழிவற்ற ஆன்மிக உன்னத வழியே மெய்வழி தேவ திருநாட்டு குருகுல மக்களின் திருச்சபையே மெய்வழி! இறுதி தீர்ப்பு பிரளய நீதி நடத்தி வையம் முழுவதும் ஒரே குருகுல நெறி நீதியில் ஆக்கிட, நீதிக்கோள் தாங்கி வந்து தருமயுக வித்து நாயகத்தின் இறைபெரு வழியே மெய்வழி! மெய்வழியும் மெய்க்கல்வி கலாசாலையும் மெய்வழிச் சபையின் வித்து நாயகம் பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்களே, மெய்க்கல்வி கலா சாலையின் போதனாசிரியர் ஆவார்கள்.



முன்னாதி காலம் முதல் தொடர்ந்து வரும் முனிவர் வழி வழி மகா மந்திர பிரேரணை தேவ ரகசியத்தை மெய்க்கல்வி கலாசாலையில் மக்களுக்கு ஆண்டவர்கள் தெள்ளத் தெளிவாக போதித்துள்ளார்கள். ஆதீன ஆதி பரம்பரை பூர்வீக புராதன மெய்ஞ்ஞான கல்வியை உலகிற்கு விளக்கி எடுத்துரைக்க வந்தவரே இந்த ஜெகத குருக்கொண்டல்! “எவ்வழி மெய்வழி என்ப வேதாகமம் அவ்வழி எனக்கருள் அருட்பெருஞ் சோதி” என்று வேண்டுகிறார் வடலூர் வள்ளல் பிரான்.



“இந்த இறுதி தீர்ப்பரை வணங்குவோர் மீட்புக்குரிய தீர்க்க தரிசியர்கள் ஆவார்கள்” என்று வேதச் செம்மல் சொராஸ்டர் நாயகம் கூறுகிறார். 

கிரந்தங்களும், திருவாயுரை விரிப்புகளும்


.

ஆதியே துணை




                 ஆண்டவர்கள் அருளிய கிரந்தங்களும், திருவாயுரை விரிப்புகளும் இந்த ஜெகத்குரு, மெய்ஞ்ஞான உண்மைகளை தீப ஸ்தம்பம் போல பிரகாசிக்கும்படி, ஆதிமெய் உதய பூரண வேதாந்தம், ஆதி மான்மியம் போன்ற அபூர்வ ஞான கிரந்தங்களையும், பல்வேறு விதமான உட்பொருள் ஆதார உயிர் பதிப்பு திருவாயுரை விரிப்புகளையும், உலக மக்களுக்கு அருளியுள்ளார்கள்.

ஆனிப் பொன்னம்பலப் பலன் தரும், மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் அவதாரத்தைக் குறித்து ஊணி, முன்முறையாதிய பல்லாயிரம் திடதீர்க்க தரிசனங்கள் உள்ளன. மதங்கள் பல பலவாயுள்ள அறுபத்து ஒன்பது ஜாதி


மக்கள் எல்லோரும் கூட்டமாக மெய்வழியில் ஒன்று கூடி, ஜீவ ஏற்றத்தில் ஏறிட, தெய்வமவர்களின் வரம்தரும் வேத கிரந்தங்களான இவற்றை எல்லாம் எந்நாளும் ஓதி, இரவு பகலாக மெய்ஞ்ஞான பிரகாச தேன் கடலில் ஆழ்ந்து ஆழ்ந்து பரமானந்தத்தில் திளைத்து வருகின்றனர்.

"ஆதிமெய் உதய பூரண வேதாந்தம்" - ஆதிமெய் உதய பூரண வேதாந்த நூலில் பூரணப் புதையல், மெய்ந் நிலை போதம், மெய்ம்மண ஞானம், அமுத கலைஞான போதம் என்ற பல்வேறு மிக உயர்ந்த தத்துவாதீக ஞான போதனை பகுதிகளைத் தந்திருக்கிறார்கள். சர்வ வேதங்களின் அகமிய பெருமறை சாஸ்திரங்களில் பின்னி இருந்தவை அனைத்தும் தெள்ளெனப் பிளந்துக்காட்டும் ஞான நூல் இது. ஆண்டவர்கள் அருளிய வேதத்தில், ஞான நிலையின் இயல், யோக காட்சிகள், பிறவி மாறுதல், நாத தேகம், விட்ட தொட்ட குறை, உலக அன்னையாக வெளி வரும் மாதேவியின் தோற்றம், தேவ நிலையில் ஏறி நிற்கும் வாணி சக்தியின் காட்சி போன்ற பல யோக வைப்புகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்து காட்டுகிறார்கள்.

பெறற்கரிய ஞான நிலைகளைத் தொட்டுத் தொட்டுக் காட்டி முடிவான பூரண ஞானநிலையையும் எடுத்துரைத்து உள்ளார்கள். ஆதி மான்மியம் மான்மியம் என்ற ஆண்டவர்களின் இந்த சரித நூலைப் படிப்போர் அனைவரையும், மூச்சு லயமாகிய மனோலய மந்திர தவச்செயலில் மூழ்கடிக்கச் செய்யும் ஒரு தவ நூலாக, சுந்தரத் தமிழில் அருளியுள்ளார்கள். நரரை மக்களாக்கி மக்களைத் தேவராக்கும் இந்த மெய் ஞான தேவ மக்கள், ஆண்டவர்களின் வரலாற்று நூலான ஆதிமான்மியத்தைத் தினமும் இரவு பகல் எந்த நேரமும் தோத்தரித்துக் கொண்டிருக்கும் இந்த தவமுறை பயிரேற்றம், மனுத்தலைகளுக்கு தவசெழிப்பேற்றமாக உள்ளது.


பிரம்மோதய மெய்வழிச்சாலை ஆண்டவர்களின் திருவரலாறும், மெய்வழிச் சபையும்

ஆதியே துணை


         தேவ உலக தீர்மானப்படி நிகழ இருக்கும் ஏழாம் பிரளயமும் ஆதி பரம்பொருளான ஆண்டவர்களின் திருஅவதாரமும். அளப்பரிய ஏக இருட் கோளத்தில் விசும்பி எழும்பிய பேரொளி பிழம்பான ஆதிமூல பரம்பொருளுக்கு, இவ்வுலகம் அனைத்தையும் உண்டாக்கி அருளாட்சி புரிந்து நல்லாட்சிசெய்ய ஆலோசனை தரும் உரிமையுடைய தேவ உலகம் ஒன்று உண்டு. அப்பாலுக்கு அப்பாலாய் சரித்திரத்திற்கு எட்டாத நாள் தொட்டு இறப்பு, பிறப்பு அற்ற, ரூபசொரூபமற்ற வான்உலக பரலோக தேவமக்கள் இதில் உள்ளனர். தலைநாளுக்கு அப்பால் தலைநாளாகிய ஆதி சபேசிய ரகசிய காலத்திலிருந்நே இந்த தேவ உலக மக்கள், இறை தூதுவர்களாக, மெய்ஞ்ஞான பாரவான்களாக மனித கோலமெடுத்து மனிதருக்குள் மனிதராக இப்பூ உலகிற்கு வந்து, மக்களுக்கு மெய்ஞ்ஞான அருள் தந்து உய்விக்கும் கடமையைப் பூண்டவர்கள். 

                                      “வந்திடுவேன் யுகந்தோறும் யுகந்தோறும்” 

என்று கூறும் கிருஷ்ண பரமாத்மாவின் பகவத்கீதையில் இந்த உண்மையை அறியலாம். “தேவ கூட்டுறவு திருமரபு கூட்டத்தினர்” என்று இந்த தேவ மகா புருஷோத்தமர்களுக்குப் பெயர். ஸ்ரீ கண்ணபிரான், ஸ்ரீ ராமன், ஏசுபிரான், நபிகள் நாயகம் போன்ற இலட்சத்து இருபதாயிரத்திற்கு மேல் இந்த மாமுனிவர்கள் வாழையடி வாழையாக உலகிற்கு அவதாரம் செய்து வந்திருக்கிறார்கள் என்பதை சத்தியவேதமான பைபிள், திருக்குர்ஆன் மற்றும் சைவ, வைணவ, பௌத்த சுருதி வேத கிரந்தங்களில் காணலாம். 


இறைவன் தனது நான்கு கோடி சூரிய பிரகாச கிரணங்களை அடக்கிக் கொண்டு மனித ரூபத்தினுள்ளே உள் புகுந்துள்ளதை எடுத்துக் காட்டும் வல்லபம் இறைவனின் முதன்மை கிரணங்களான இந்த இறை தூதுவர்களிடம் மட்டுமே தலைமுறை தலைமுறையாக ஊற்றோடி ஓடி இன்று வரை வந்துள்ளது. வேதத்தையும், மதத்தையும் உண்டாக்கியவர்களும் இவர்களே. அகண்டாகார பெருவெள்ள மெய்ஞ்ஞான பெட்டகத்தின் பொக்கிஷ அறையைத் திறக்கும் மந்திர மாத்திரை திறவுகோல் கொண்டு தங்கள் பெருங்கருணையால் இந்தத் தேவதூதர்கள் உலக மக்களுக்குத் திறந்து காட்டி, ஞான அறிவு தந்து பரமபதம் அடையச் செய்கிறார்கள். இது இறைவனின் தீர்ப்பு. 


இப்போது பாவம் நிறைந்து விட்ட இந்தப் பூமி, இனிமேலும் பாவகனத்தைச் சுமக்க இயலாததால் தெய்வத் திருவளநாட்டு நித்திய சூரியர்கள் ஒன்று திரண்டு கூடி, முன்னமேயே நிர்ணயிக்கப்பட்ட சந்திரசாப கணக்கின்படி ஏழாம் ஊழிப் பிரளய முடிவு நியமன தீர்ப்பு நாள் இப்போது நெருங்கிவிட்டதைப் பற்றி கலந்து பேசினார்கள் என்பதை வந்த எல்லா வேதங்களும் எடுத்துக் காட்டுகின்றன. புது உலகம் பிறப்பிப்பான் வேண்டி, ஆதிமனு நீடாழியராகிய ஆதிமூல பரம்பொருளே, ஜீவ தயாபரராக ஜகம்உய்யும் பொருட்டாய் மனுக்கோலமெடுத்து, இறுதிகால நிக்கிரக அனுக்கிரக பணி ஏற்று, உலக மக்களை உய்விக்க இப்பூ உலகிற்கு அவதரித்து செல்ல வேண்டு மென்று வேண்டிக் கொண்டுள்ளார்கள் என்ற வரலாற்றைப் பழம் மாமறைகளில் காணலாம்.மேலும், அப்படி மெய்ரூபமாக பரம்பொருள் எழுந்தருளும் போது, ஏற்கெனவே இதுவரை இப்பூமண்டலத்திற்கு வந்து, ஜீவ தேகம் பெற்று, மண்ணில் மறைவு செய்யப் பெற்றிருக்கும் மதிமகத்துக்கள் அனைவரும், உடன் எழுந்து அவருடன் அவதரித்து வந்து, சாகா வர நித்திய தேகம் எடுப்பதற்காக - ஊழிப்பிரளய நீதித்தீர்ப்புக்கு காத்திருக்கும்படி கட்டளையும் பிறப்பிக்கப் பெற்றது. 

அதன் பொருட்டு, சிருஷ்டி முதலிய ஐந்து கிருத்தியங்களையும் செய்யும் சர்வேஸ்வரனே, இந்த சர்வமத வேதகர்த்தர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வான் வேண்டி, பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களாக அவதரித்து வந்த வரலாற்றையே இப்போது நாம் காண்கிறோம். இப்படி அவர்கள் அவதரிப்பதைப் பற்றி, அந்த தேவ திருக்குழாம், தாங்கள் வருகை தந்த ஒவ்வொரு காலத்திலும் தங்கள் தவ வலிமையால், ஆண்டவர்களின் இந்த வரலாற்றைக் கூடவே இருந்து பார்த்தவர்கள் போல், திடதீர்க்க திருஷ்டியில் தீர்க்க தரிசனங்களாக பல ஆயிரமாயிரம் கிரந்தங்களில் உலகிற்கு எழுதி அறிவித்து வந்திருக்கிறார்கள். இப்படி அவதரித்து வந்த ஆதி மனுமகன், அனைவருக்கும் யுகங்கோடி முடிவு ஜகக்கோடி வாழ்வு வழங்கி, சாவாவரம் தந்து கொண்டிருக்கும் மாபெரும் செய்தியின் சுருக்கத்தையே இப்போது தெரிவித்துள்ளோம். 

தீர்க்க தரிசனமாக இந்த ஆதிமூல ஆவியின் அவதாரத்தைக் கண்டு “சன்மார்க்க சாலையப்பா என்னை வந்து தாங்கிக் கொள்ளே” 


என்று வேண்டுகிறார் வடலூர் வள்ளல் பிரான். பிற்காலத்தில், தவ ஏற்றம்கொண்டு சர்வ சன்னததாலங்கிர்தராக உருவெடுத்த மெய்வழி தெய்வம், அன்று பாண்டிவள நாட்டில், அதாவது தற்போதைய திண்டுக்கல் மாவட்டத்தில், மார்க்கம்பட்டி என்னும் சிற்றூரில் தமிழ் இஸ்லாமிய குடும்பத்தில் 19 ஆம் நூற்றாண்டில் (கி.பி. 1857 ஆம் ஆண்டில்) அவதரித்தார்கள். கொங்கு வளநாட்டில் அதாவது தற்போதைய ஈரோடு மாவட்டத்தில் திங்களூர் - பெருந்துறை, காசுக்காரன் பாளையத்தில், நெல் வணிகம் செய்து செல்வ செழிப்போடு இல்வாழ்க்கையில் இருந்து வந்த காலத்தில், ஆதி ஊழிவிதி தேவ தீர்மானப்படி, தேவநாட்டிலிருந்து வழிவழியாக வந்த தனிகை மணி வள்ளல் என்னும்



பழம் பெரும் பிரம்ம சொரூப மாமுனிவர் அவர்களை 1901 ஆம் ஆண்டில் சந்தித்து, அச்செம்மலின் திருவருளுக்குப் பாத்திரமாகி, அவருடன் துறவு பூண்டு எழுந்தார்கள். தமது பெரிய வியாபாரத்தையும், இளம் மனைவியையும், பால் மனம் மாறா பெண் குழந்தையையும் விட்டு விட்டு பிரிந்து, ஏழை வடிவினராய் துறவு கோலத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள். அவர்களுடன் இருபத்து மூன்று ஆண்டுகள் உடன் இருந்து நாடெங்கும் அகிலவலம் வந்து, பூரண ஞான தேவ வடிவு வேத போத ரகசியங்களையும், பூட்டப் பெற்றிருக்கும் தேவ திருவருள் தெய்வ ஆதின பாரம்பரை கட்டுத் திறவுகோலையும் கைவசம் பெற்று பூரண மெய்ஞ்ஞானி ஆகினார்கள். 

வடலூர் வள்ளற் பிரானுக்கு பூரண ஞான செல்வத்தைத் தந்து, அவரை உயர் ஞானியாக்கியவர், ஆண்டவர்களின் குருக்கொண்டலரான இந்த தனிகைமணி ஞான செம்மலே ஆவார்கள். இவர்களே தான், வள்ளலார் மறைவுக்கு (1874) பிறகு 27 ஆண்டு காலம் காத்திருந்து ஆண்டவர்களைக் கண்டெடுத்து ஞான பிரகாசத்தை அருளி பிரம்ம சொரூபியாக மாறச் செய்தார்கள். தொடர்ந்து ஆண்டவர்களுக்கு ஓர் அருந்தவ கட்டளையிட்டு, திருக்கயிலாய நாட்டு வேத விதிப்படி தன்னிகரற்ற மேருகிரி தவத்தில் ஆண்டவர்களை அமரச் செய்தார்கள். ஆண்டவர்களும் நெடுநாள் அன்ன ஆகாரமின்றி நிர்விகார ரகிதநிலையாசன தவக்கோலத்தில், கடுந்தியான முகத்திலிருந்து, கைவல்யபதம் அடையப் பெற்று, நித்திய ஜீவ மகா முனிவராகினார்கள். தனிகைமணி வள்ளல் அவர்களும், தேவமகா சபையில் தாம் முன்னரே வாக்கு தந்தபடி நீதித்தீர்ப்பு நடத்தும் பெரும்பார அருங்காரண செயலை ஆண்டவர்களிடம் ஒப்பிவித்து, மனுக் கோடிகளுக்கு கதிமோட்சம் தரும் பாசுபத கங்கண முத்திரையையும் அவர்களுக்குப் பதிப்பிக்கச் செய்தார்கள். மேலும், சர்வக்ஞ தன்மை கொண்ட இந்த ஞான செல்வத்தை, உலகம் முழுவதும் உய்யும்படி செய்து அனைவரையும் ஆட்கொள்ளும்படி ஆண்டவர்களுக்கு ஆணையிட்டு ஆசீர்பதித்தார்கள். ஆண்டவர்களும், தமது குரு கொண்டலர் அவர்களின் ஆக்ஞைபடியே, உலக மக்களை உய்விக்க, கலிவலி தொலைத்து தலையுகப் பயிர் ஏற்றும் பணிக்கென்றே, மெய்வழிச்சபையை உண்டு பண்ணி, இறைதிருவடிசேர் பெருநெறியில் கி.பி.1923 ஆம் ஆண்டு முதல் மக்களைச் சேர்த்து அனந்தாதி தேவ குலமாக்கினார்கள் மேலாம் பதம் தரும் ஜீவரட்சிப்பு அருள் உபதேசங்களை, உயிரினிமை உணவாக உலக மக்களுக்குத் தந்து, அனைவருக்கும் ஜீவ ஆவி அறிவானது எழும்பி மீறி ஏறிபூரிக்கின்ற அருள் அமுதத்தினை அருந்த அருந்த தந்தார்கள். 


ஞானப் பயிரேற்றம் செய்ய மெய்வழிச் சாலை என்ற ஊரையே உண்டு பண்ணினார்கள். 

“பன்னிரண்டு தேவ சன்னதங்கள் பெற்ற சிவமூர்த்தியாக இறுதி காலத்தில் வரும் இவரே தென்னாட்டுடைய சிவன்” 


என்று ஞான செம்மல் மாணிக்கவாசக பிரான் திடதீர்க்க தரிசனம் கூறுகிறார். “உடுக்கை சங்கு சூலம் தாங்கி வந்துள்ள இந்த மெய்வழி தெய்வத்தை பூஜிக்கின்ற அனைவரும் இடைஞ்சல்கள் நீங்கி மெய்யான ஞானமும் அடைவார்கள்” என்று தீர்க்க தரிசனமாக மகரிஷி வீரபிரம்மம் கூறுகிறார்.