Saturday, May 31, 2014

உண்மையான மெய்ஞானம் பெற ஒரு அறிய வாய்ப்பு!!

.
ஆதியே துணை

மெய்வழிச்சாலை - உண்மையான மெய்ஞானம் பெற ஒரு அறிய வாய்ப்பு!!

இந்த தகவலில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னித்து அருளுமாறும் எல்லாம் வல்ல என் மெய்யருட் குரு பிரான் பிரம்ம பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்களை பிரார்த்தித்து வேண்டி எழுத முயற்ச்சிக்கிறேன்.

இந்த உலகத்தில் மெய்ஞானம் என்ற பெயரில் ஒரு பெரிய வியாபரமே நடக்கிறது.

யதார்த்தமான நிசமான மெய்ஞானம் கிடைப்பது மிகவும் கடினம். அது இந்த காலத்தில் இது ஏது என்று எதார்த்த நன் மனம் கொண்டவர்கள் நினைக்க தோன்றும்!.

இந்த கலி கால
த்தில் உண்மையான மெய்ஞானி யாறேனும் இருக்கிறார்களா ?. அப்படி இருந்தால் அவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது. நிச மெய்ஞானி இருந்தால் அவர்கள் இந்த உலக செல்வங்களுக்கும் பொருள்களுக்கும் ஆசைப்படாமல் இருப்பார்கள். ஆகவே அவர்கள் மிகவும் எளிய முறையில் எந்த விளம்பரமும் ஆடம்பரமும் இல்லாமல் இருப்பார்கள். அவர்களை எப்படி தேடி கண்டு பிடிப்பது ?.


அப்படி கண்டு பிடித்து அவர்களிடம் என்ன கேட்க வேண்டும் ?. இந்த உலக செல்வமும் மதிப்பும் இன்னும் அதிகம் வேண்டும் என்றால் உண்மையான மெய்ஞானி தேவை இல்லை. கடும் உழைப்பு இருந்தால் போதும்.

ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றாலும் மெய்ஞானி தேவை இல்லை. நல்ல முறையான சாரிட்டி அல்லது உதவி மையங்களை நாமே அமைத்துக்கொள்ளலாம். அரசாங்கம் மற்றும் எவ்வளவோ உதவி நிறுவனங்கள் உள்ளன.

ஒரு மெய்ஞானியை எப்படி அடையாளம் கண்டு கொள்வது ?.
மாயஜாலம் வித்தை கற்றவரா ?. அப்படியானால் ஒரு மேஜிக் (மஜிசியன்) கற்றவருக்கும் மெய்ஞானிக்கும் என்ன வித்தியாசம் ?.

நோய் நொடி அல்லது மன அமைதி பெற்று தருபவரா?. அப்படியானால் டாக்டர் களுக்கும் மனநல வல்லுனர்களுக்கும் என்ன வேலை ?.

மேலே குறிப்பிட்டுள்ள கேள்விகள் அவ்வளவும் மற்றும் எல்லா விதமான எதார்த்த மெய்ஞான கேள்வி களுக்கும் விடை தரக்கூடிய ஒரு அற்புத கனி கொடுக்கும் விருட்சமே மெய்வழி சாலை!.

பிரம்ம பிரகாச மெய்வழிச்சாலை ஆண்டவர்களின் ஒப்பற்ற நான்கு பெரும் மெய்ஞான வேதாந்தங்கள் படிபவர்களின் உள்ளத்தை நெகிழ செய்யும்!. உண்மையான ஞானம் என்றால் என்ன என்பதை உணரச் செய்யும்!

சாதிகளின் அரசர், தேவதேவேசர் பிரம்ம பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்களின் சிறப்பை உணர அவர்கள் இயற்றி அருலியுள்ள மெய்ஞான வேதாந்த நூல்கள் சாட்சி!

பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளி இயற்றியுள்ள மெய்ஞான நூல்கள் மிகவும் அற்புதமான வேதாந்த விளக்கங்கள் பொதிந்தவைகளாக உள்ளன.

அவற்றின் பெருமையை தெரிந்துகொள்ள இதோ சில இந்த இணைய தளத்தில் விவரிக்கப்பட்டு உள்ளன.

எதார்த்த நன்மன மக்கள் மெய்வழிச்சாலைக்கு சென்று மேலும் விபரம் பெருக!

மெய்வழி சாலை விலாசம்:

MEIVAZHI SALAI
PUDUKKOTTAI DISTRICT,
ANNAVASAL VIA
TAMILNADU-622101,
INDIA